Tuesday, September 24, 2013

அன்று ஓர் இரவு..

படித்தால் வெற்றி.. பணத்தால் வெற்றி..
அழகால் வெற்றி.. புகழால் வெற்றி......

வெற்றியை நோக்கி வெற்றிடம் ஓடி
மாற்றான் சொல்லுக்கு மந்திரம் பாடி
நிலைமையை ஏற்ற நிம்மதி இழந்து
வறுமையை தவிர்க்க தனிமையில் தவழ்ந்து

முளைத்த சிறகு வளரும் முன்னே
வீட்டை விட்டு பறந்த பறவை
திக்கு தெரியாமல் தனித்து நிற்க....

இணைய தலத்தில் எத்தனை முத்தங்கள்
சத்தங்கள் ஆகா காற்றில் பறக்க....

இளமையை என்ற நீண்ட பாதையில்
இடித்து இடித்து இருட்டில் பயணம்..

விடியுமோ இந்த காலை?
வீடு திரும்புமோ இந்த காளை?
தொடருமோ  எனது தொடக்கம்? அல்லது
அறிவேனோ இவ்வாழ்வின் விளக்கம்....