Sunday, February 2, 2014

"காலம்..."

பசித்து அழும் சேய்க்கு
பால் கொடுக்கும் தாயே..
தனித்து நிற்கும் எனக்கு
தோள் கொடுக்கும் தமிழே...

பலன் இல்லா கேள்விகள்
பல என்னிடம் உண்டு,
பணிவோடு கேட்பேன்
பதில் சொல்வாயோ இன்று?

கடவுளோ? காதலோ?
வீடோ? நாடோ?
உறவோ? பகையோ?
நீயோ? நானோ?
தேடி தேடி தொலைந்தே போனேன்
தடவி தடவி தடுக்கி விழுந்தேன்..
இவ்வாழ்வின் விதிகள் அறியேன்..
வெற்றியும் அறியேன்..
பாதை அறியேன்..
கீதையும் அறியேன்...

ஏன் இந்த ஆட்டம்
தடங்களுடன் இப்படி ஒரு ஓட்டம்?
கண்டு கொல்லாத அகவையும் இல்லை
கவனிக்க முடியாத முதுமையும் இல்லை..
தெளிந்தவனுக்கு துயர் இல்லை
தெரியாதவனுக்கு புதிர் இல்லை..
விண்டவர் கண்டதில்லை,
கண்டவர் விண்டதில்லையொ?

எண்ணங்களின் காட்டில்
என்னை நான் தொலைக்க
குழப்பங்களின் ராஜ்யத்தில்
குடும்பம் நடத்த..

தூரத்தில் உன் பதில்
காதோரத்தில் ஒலித்தது..
டிக் டிக் டிக்...