காலையில் காபி
frappe ஆனது...
விழித்தெழு என்று
skype சொன்னது,,.
கையில் எப்போதும்
apple உள்ளது..
கண்ணில் எப்போதும்
google கண்ணாடி மிதந்து..
ஓட்டத்தை அளந்து
ஓலி ஒன்று எழும்புது
வாட்டத்தைப் போக்க
whatsapp வந்தது..
மாற்றங்கள் பல..
மாயங்கள் பல...
பெற்றது இவை எனில்
இழந்தது யாவோ?
தூரத்து சொந்தங்கள்
மறைந்தே போனது..
இருக்கும் சொந்தங்களோ தூரமாய்
வாழ்ந்தது...
கல்யாணத்திற்கு அழைப்பு வந்தால்
கடிதாசியிலே மொய்யும் வந்தது..
கண் மூடி உறவினர் மாய்ந்தால்
தொலை பேசியிலே கண்ணீரும் வந்தது..
உன்னை பெற்றவர் நாங்கள் தானே..
உன்னை விற்றவர் என ஆனது என்ன?
திரை கடல் ஓடி திரவியம் தேடியே..
வாழ்க்கை வரை படத்தில் மறைந்தே போனியே..
3 அறை கொண்ட மனை வாங்கவே
மன அறையை பூட்டி வைத்தாயே..
ஆயிரம் முறை கணினியில் பார்த்தாலும்
உன்னை கண்ணால் ரசிப்பிதற்கு ஈடாகுமோ?
வந்து விடு என்னிடம்.. நீ என்னுடன் இருந்தால்
அந்த வானம் வசப்படும்.. நம் வாழ்வு சுகப்படும்..
No comments:
Post a Comment