Monday, November 18, 2013

தண்ணீரில் தாமரை இலை...

தனியே ஒரு இரவு ..
தூக்கமோ தூரத்து உறவு..
தவிக்கிறது நெஞ்சம்...
துடிக்கிறது கொஞ்சம்...

வாழ்கை வருகிறது கண் முன்னே..
நேற்று தெரிகிறது அடி பெண்ணே..

மறக்க மனம் மறுக்கிறது..
நினைக்க உலகம் எதிர்க்கிறது...
விட்ட கைகள் தொலைவில் இருக்க..
தொட்ட கைகள் தோற்று அழுகிறது..

சில இன்னாருக்கு இன்னாரென்று
எழுதி வைத்தவன்
பல இன்னாருக்கு இன்னாவே
எழுதி வைத்தானோ?

சேர்ந்து பார்த்த காட்சிகளையும்...
சேர்த்து பார்த்த கனவுகளையும்..
தனித்து படுத்து
நினைத்து பார்க்க...

தரையை தட்டியது தலை...
சட்டென புரிந்தது இந்த வலை..
இது உலக வாழ்விற்கான விலை..
ஆம், தண்ணீரில் தாமரை இலை...

No comments:

Post a Comment