Saturday, May 31, 2014

ஒரு-வரி(ன்) விடை..

பிறப்பு?
அன்பின் பரிசளிப்பு..

இறப்பு?
இயற்கையின் கடன் அடைப்பு..

கல்வி?
முரண்பாடு.. அறியாமையை அறியும் ஆராய்ச்சி..

ஆண்?
இடியை தாங்குபவன்.. மடியை நாடுபவன்...

பெண்?
தன் உலகை சுரூக்கியவள்..உள்ளத்தை பெருக்கியவள்..

காதல்?
இளமையில் "கள்".. முதுமையில் மயில்கல்...

தாய்?
சாதனைகளை பேசும் போதும் சாப்பிட சொல்பவர்..

தந்தை?
உனக்கும் மேலே உன்னை நம்புபவர்..

வெற்றி?
வினை எச்சம்..தொடு வானம்..

தோல்வி?
புவி ஈர்ப்பு.. தொடு பாதம்...

கடவுள்?
விளக்கமில்லா கேள்விகளின் பதில்..

மனிதன்?
தேடி தேடியே தொலைந்து போபவன்..

நிம்மதி?
கள்ளம் இல்ல உள்ளம்..களங்கம் இல்ல எண்ணம்..


No comments:

Post a Comment