Tuesday, November 24, 2015

விமானத்தில் விவாதம்!



"முதல் பார்வையில் காதலா?
ஆழம் தெரியாமல் காலா?
தொட்டு பார்த்து தீண்டி உரசி,
கட்டி பிடித்து கைகள் சேர்த்து,
கண்ணும் கண்ணும் கலந்த பின்னுமே,
கண்ணா பின்னா காரணத்தாலே
அல்ப காலத்தில் காலம் ஆகும்
கலியுக காதலில்...
கண்டவுடன் என்னதென்று
கண் கட்டு வித்தைக்கு
காதல் என்று பெயர் இடாதே..".

கார சாரமாய் பேச்சு வாரத்தை செல்ல
அந்தரத்தில் விஞ்ஞானத்தின் குழந்தையில் பறக்க...
ஒலி பெருக்கி சத்தத்தில் நண்பனின் வாதம்
கல்யாண கூட்டத்தில் கேளா நாதம்

தலை திரும்பி பார்த்த விநாடி...

மலைகள் இடித்து சிதறும் சாரல்
மேகம் ஒடித்து மலரும் தூரல்...

போர் முரசு போல் இதய துடிப்பும்  
வால் வீரர் போல மெய் சிலிர்ப்பும்
அணுவின் உட்கரு போல ஓர் அபார சக்தியும்...
பிரபந்த பிறப்பு போல ஓர் பிரம்மாண்ட யுக்தியும்...


மாறி மாறி என்னை தாக்க...

தூரத்தில் அவள்...
விமானத்தின் மகள்...
தேவதைகளின்  துகள்...

தலை திரும்பி நண்பனை பார்த்தேன்...
புதிய காதலின் புண் சிரிப்போடு புணர்ந்தேன்
"வைரமுத்து வரிகளின் வலி உணர்ந்தேன்
காதல் பொய் என்று சொன்னேன்
அவளைக் காணும் வரை."





No comments:

Post a Comment