Wednesday, July 27, 2011

காதல்...





மௌனம்.

பெண்ணே-
நீ பேசிய போது நிறுத்த மனமில்லை,
நீ நிறுத்திய போதோ மனமே என்னிடம் இல்லை!!



பிறப்பு.

பெண்ணே -
உன்னால் நான் தினமும் பிறக்கிறேன்!
அன்பே-
இரவில் உன் நினைவுகள் தன என்னை கொன்றுவிடுகிறதே!!


கண்ட நாள் முதல்..

இது வரை நான் நிற்கிறேன்,
உலகும் சுற்றுகிறது,
என்று நினைத்தேன் -
அது பொய் -
நான் சுற்றுகிறேன் !
உலகம் நிற்கிறது !!
உன்னை கண்ட நாள் முதல்.

குழி..


காதலியே! என்னை காப்பாற்று-
உன் கன்னக்குழியில் தடுக்கி
இதயத்தில் விழுந்துவிட்டேன்!!


காதல் தோல்வி.

நான் காதலில் தோல்வி அடைந்தாலும்
தற்கொலை செய்ய மாட்டேன் - பெண்ணே
நீ சுவாசிக்கும் காற்றை
சுவாசிக்கும் வாய்ப்பை
இழந்திவிடுவேனே !!

சொர்கமே நரகம்..

இறந்தபின் சொர்கமோ நரகமோ
இயற்கையில்..
சொர்கமே நரகமான பின் இறப்பது
காதலில்..

No comments:

Post a Comment